”இறக்கும் போதும் என் உயிர காப்பாத்துனா லெட்சுமி யானை” – பாகன் வைத்த உருக்கமான கோரிக்கை!
“வலது புறம் கால் ஊன்றியவள் நான் நிற்பதை பார்த்து இடது புறம் சாய்ந்து; என் உயிரை காப்பாற்றி விட்டு, என்னை அனாதையாக்கி விட்டு சென்று விட்டாள் என் லெட்சுமி” என கண்ணீருடன் தெரிவிக்கின்றார் உயிரிழந்த லெட்சுமி யானையின் பாகன். உயிரிழந்த லட்சுமி யானை குறித்து உருக்கமான கோரிக்கையையும் அவர் வைத்துள்ளார். புதுச்சேரியில் மிகவும் பிரசித்திபெற்ற மணக்குள விநாயகர் கோவில் யானை லட்சுமி நேற்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தது. 32 வயதான லட்சுமி…