`புத்தாண்டு இரவில் மறந்தும் இதையெல்லாம் செய்துடாதீங்க!’- டிஜிபி சைலேந்திரபாபு கண்டிஷன்!
அசம்பாவிதம் எதுவும் ஏற்படாத வகையில், விபத்தில்லாத புத்தாண்டு கொண்டாட காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். உலகம் முழுவதும் 2023 புத்தாண்டு கொண்டாடங்கள் களைகட்டத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் புத்தாண்டு கொண்டாடங்களின் போது, குற்ற சம்பவங்களோ அசம்பாவிதங்களே நிகழாமல் தடுக்கும் வண்ணம் தமிழக காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக டிஜிபி சைலேந்திரபாபு தெரிவித்துள்ளார். அவர் பேசுகையில், “டிசம்பர் 31 ஆம் தேதி மாலை முதல் சுமார் 90 ஆயிரம் காவல் துறையினரும் 10 ஆயிரம் ஊர்க்காவல் படையினரும்…