புத்தாண்டு பாதுகாப்பு பணியில் 1 லட்சம் போலீசார்! சிறப்பு வழிகாட்டுதலுடன் கொண்டாட அறிவுரை
புத்தாண்டு அன்று 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர் என்றும், புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 31 ஆம் தேதி அன்று மாலை பொதுமக்கள் புத்தாண்டை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் கொண்டாட வேண்டும் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. 31ஆம் தேதி இரவு பொது இடங்களிலும் சாலைகளிலும் கூட்டம் கூடுவதைத் தவிர்த்து வீடுகளில் குடும்பத்துடன் சேர்ந்து புத்தாண்டை கொண்டாட காவல்துறை தலைமை இயக்குநர் டிஜிபி வேண்டுகோள் விடுத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது….