`மதம்மாற சொல்லி கட்டாயப்படுத்துகிறார்கள்’- ஆட்சியர் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி
மதமாற்றம் செய்ய கட்டாயப்படுத்துவதாகக்கூறி பெண்ணொருவர், மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்கும் முயற்சியில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் அருகே கருப்ப குடும்பன் பச்சேரி என்ற கிராமத்தில் வளர்மதி என்பவர் வசித்து வருகிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வளர்மதியை இந்து மதத்தில் இருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறும்படி அக்கிராமத்தில் உள்ள கிறிஸ்தவர்கள் கட்டாயப்படுத்துவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதோடு, தனது மகனையும் அவர்கள் அடித்து துன்புறுத்தி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்….