சென்னையில் இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியுடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோ காட்சிகளை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னை மட்டுமல்ல தமிழகம் முழுவதும் பட்டா கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடுவதும், லைக்குக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் சிலர் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிடுவது வாடிக்கையாகி வருகிறது.

image

இந்த செயல்களை தடுக்க காவல்துறையினர் துரித நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இதுபோன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்களை காவல்துறையினர் பிடித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பிய சம்பவங்களும் நடந்துள்ளது.

இந்நிலையில், சென்னையில் பட்டாக் கத்தியால் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர்கள் சிலர், அதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளனர். இது தற்போது வைரலாகி வருகிறது. இது தொடர்பான தகவலின் அடிப்படையில் சென்னை காவல்துறை சைபர் கிரைம் போலீசார் உதவியுடன் வீடியோவை வைத்து சம்பவத்தில் ஈடுபட்ட இளைஞர்கள் யார் யார் என்பது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

image

மேலும், இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்ற செயல்பாடுகளில் ஈடுபடுவதை விடுத்து, இளைஞர்கள் மற்றவர்களுக்கு முன்மாதிரியான செயல்பாடுகளில் ஈடுபடவேண்டும் என காவல்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.