நூல் விலையைக் கட்டுப்படுத்த கோரி ஏற்றுமதியாளர்கள், உற்பத்தியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தம்
நூல் விலையைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கரூரில் உள்ள ஜவுளி உற்பத்தியாளர்கள் மற்றும் ஏற்றுமதியாளர்கள் 2 நாள் வேலை நிறுத்தத்தை தொடங்கி உள்ளனர். இதனால், கரூரில் ரூ.100 கோடி மதிப்பீட்டில் உற்பத்தி இழப்பு ஏற்பட்டுள்ளது. கரூர், திருப்பூர், கோவை உள்பட பல்வேறு மாவட்டங்களில் ஜவுளி உற்பத்தி ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகள் மூலம் பனியன், ஆயத்த ஆடைகள், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி செய்யப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகின்றன. ஜவுளி உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நூல் விலை…