தனியார் கல்லூரி பேருந்து மோதி விபத்து -தேர்வு எழுத சென்ற பள்ளி மாணவருக்கு நிகழ்ந்த துயரம்
தேனி மாவட்டம் உத்தமபாளையம் அருகே தனியார் கல்லூரிப் பேருந்து மோதி, பள்ளி மாணவன் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேனி மாவட்டம் தேவாரத்தைச் சேர்ந்தவர் சந்துரு (16). இவர் உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பதினொன்றாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தற்போது நடைபெற்று வருவதால், தேர்வு எழுதுவதற்காக காலையில் தேவாரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவர் சந்துரு, உத்தமபாளையத்தில் இருந்து ராயப்பன்பட்டி…