தற்காலிகமாக நிறுத்தப்பட்ட போராட்டம்… மல்யுத்த வீரர்கள் முன்வைத்த 5 முக்கிய நிபந்தனைகள் என்னென்ன?
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவர் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான பாலியல் குற்றச்சாட்டு விவகாரத்தில் அவரைக் கைதுசெய்ய வேண்டுமென்ற மல்யுத்த வீரர், வீராங்கனைகளின் குரல் நாளுக்கு நாள் வலுத்துக்கொண்டே வருகிறது. இப்படியான சூழலில் பஜ்ரங் புனியாவும், சாக்ஷி மாலிக்கும் கடந்த சனிக்கிழமை நள்ளிரவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொண்டனர். அந்தப் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் போராட்டம் கைவிடப்பட்டதாகச் செய்திகள் வெளிவர, மல்யுத்த வீரர், வீராங்கனைகள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். பிரிஜ் பூஷண் சரண்…