பண மதிப்பிழப்பு: “ராகுல் காந்தி இப்போது மன்னிப்பு கேட்பாரா?!” – முன்னாள் மத்திய அமைச்சர் தாக்கு!
2016-ல் கறுப்புப் பணத்தை ஒழிப்பதாகப் பிரதமர் மோடியால் திடீரென ரூ.500, ரூ.1,000 செல்லாது என நடைமுறைப்படுத்தப்பட்ட பண மதிப்பிழப்பு நடவடிக்கையை இன்றுவரை அரசியல் கட்சிகள் பலவும் கடுமையாக விமர்சித்து வருகின்றன. அதேசமயம் மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு எதிராக 58 மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. உச்ச நீதிமன்றம் இந்த வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததையடுத்து, உச்ச நீதிமன்ற நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான 5 பேர் கொண்ட நீதிமன்ற அமர்வு 4:1 என்ற…