கொரோனா உண்டாக்கும் மாற்றம்… குழந்தைகளிடம் சொல்ல இயற்கையின் பாசிட்டிவ் விஷயங்கள்!
கொரோனா தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. 21 நாள் ஊரடங்குக் காரணமாக, ஆரம்பத்தில் உற்சாகமாக விளையாடிக்கொண்டிருந்த நம் வீட்டு குழந்தைகளின் காதுகளிலும் கொரோனா செய்திகள் சென்று சேர்ந்துகொண்டிருக்கின்றன. அதுபற்றி சக நண்பர்களிடம் பேச ஆரம்பித்துவிட்டார்கள். இதனால், அவர்களுக்குள் எதிர்மறை எண்ணங்கள் வந்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். கொரோனா தாக்குதல் மனித குலத்துக்குப் பேரிழப்பு என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இன்னொரு பக்கம் இயற்கையில் நடந்துவரும் மாற்றங்களைச் சொல்லி, குழந்தைகளுக்குள் நேர்மறை எண்ணங்களை விதைக்க வேண்டும். அந்த வகையில்,…