வீட்டுக்குள் முடங்கியிருக்கும் பிள்ளைகளைக் கையாள்வது எப்படி? #ParentingGuidance
எத்தனை ஆன்லைன் வகுப்புகள் நடத்தினாலும் வகுப்பறையில் அமர்ந்து கல்வி கற்பதில் கிடைக்கிற அனுபவமே சிறந்தது. அதைக் கடந்த இரண்டு மாதங்களாக மாணவர்கள் இழந்திருக்கிறார்கள். குறிப்பாக, பள்ளி மாணவர்கள். உயர்கல்வி பயில்பவர்களுக்கு, சூழலைப் புரிந்துகொள்ளும் மெச்சூரிட்டி இருக்கும், சிறுவயதுப் பிள்ளைகளுக்கு அவ்வளவாக இருக்காது. தனியார் பள்ளி மாணவர்கள் வழக்கமாக கோடைவிடுமுறை முடிந்து பள்ளிகளுக்குச் செல்லும்போது எல்லாவற்றிலும் `டச் விட்டு’ப் போயிருக்கும். சூழலுக்குள் மீண்டும் பொருந்திக்கொள்ள சிலகாலம் எடுக்கும். அப்படியிருக்கையில் இந்தத் தொடர் விடுமுறை பற்றிய மாணவர்களின் உளவியல், பெற்றோர்…