கொஞ்சல் முதல் கிரைப் வாட்டர் வரை… குழந்தை விடாமல் அழும்போது செய்யவேண்டியவை, செய்யக்கூடாதவை என்ன?
சென்னை விமான நிலையத்தில் இதுவரை நடந்திராத நிகழ்வு ஒன்று அண்மையில் நடைபெற்று அனைவரையும் புருவம் உயர வைத்தது. தமிழக முதல்வர், அமைச்சர்கள் என ஒரு பட்டாளம் பயணித்த விமானம் அது. அதில் பயணம் செய்வதற்காக ஒரு பெண் கைக்குழந்தையுடன் அமர்ந்திருந்தார். விமானம் புறப்படுவதற்கு முன்பாக அந்தக் குழந்தை அழுதுகொண்டே இருந்தது. தாய் ஏதேதோ செய்து பார்த்தும் குழந்தை அழுகையை நிறுத்தவில்லை. இதையடுத்து அந்தப் பெண் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்டிருக்கிறார். அடுத்த விமானத்தில் பயணிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார். பொதுவாகவே, நம் அனைவருக்கும்…