`எட்டாவது சாட்சி சொன்ன பொய்..!’ -கொலை வழக்கில் அதிர்ச்சி தண்டனை கொடுத்த தேனி நீதிபதி
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ளது குள்ளப்பக்கவுண்டன் பட்டி. இக்கிராமத்தைச் சேர்ந்த ராஜா (வயது 32) என்பவர், கடந்த 2014-ம் ஆண்டு, முல்லைப்பெரியாறு ஆற்றில் மின் மோட்டர்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக தண்ணீர்த் திருடும் கும்பல் குறித்து மாவட்ட நிர்வாகத்துக்குத் தகவல் தெரிவித்தார். உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற பொதுப்பணித்துறை மற்றும் மின்சாரத்துறை அதிகாரிகள், முல்லைப்பெரியாறு கரையில் வைக்கப்பட்டிருந்த மின் மோட்டார்களைப் பறிமுதல் செய்தனர். இதனால் கோபமடைந்த அதே பகுதியைச் சேர்ந்த பிரசாந்த் (வயது 26) என்பவர்,…