RCB v PBKS: பஞ்சாப்புக்கு பலம்சேர்த்த பேர்ஸ்டோ, லிவிங்ஸ்டோன்; ஆர்சிபியின் பிளேஆஃப் கனவு அவ்வளவுதானா?
கடந்த 4 சீசன்களில், ஆர்சிபி 180 ரன்களை சேஸ் செய்ததே இல்லை என்கின்ற தரவுகளே போட்டியின் முடிவையும் முன்கூட்டியே சொல்லிவிட்டது. பேர்ஸ்டோ மூலம் வீசத் தொடங்கிய புயல், லிவிங்ஸ்டனால் சூறாவளியாக மாறி, ஆர்சிபியை சுழற்றி அடித்துவிட்டது. டாஸ் ஜெயித்த டு ப்ளெஸ்ஸி மகிழ்ச்சியாக, “சேஸிங் செய்கிறோம்” என்று கூற பஞ்சாப் அணி பேட்டிங் ஆட இறங்கியது. தொடர் முழுவதும் நன்றாகப் பந்து வீசாத சிராஜ் பந்தில் அடி விழந்தது என்றால், பல போட்டிகளை தனது பக்கம் திருப்பிய…