“கொரோனாவை சீன வைரஸ் என்று அழைப்பது மிகவும் தவறானது!” – சீனத் தூதரகம் அறிக்கை
கொரோனா வைரஸ் உலகம் முழுக்கப் பரவி, ஏராளமான உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் வுஹான் நகரிலி ருந்து பரவிய இந்த வைரஸால், தற்போது 165 உலக நாடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. இத்தாலி, அமெரிக்கா, ஸ்பெயின், பிரிட்டன் போன்ற நாடுகளில் கொரோனா வைரஸால் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. சீனாவுக்கு அடுத்தபடியாக, உலகில் அதிக மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவையும் கொரோனா வைரஸ் மிரட்டிவருகிறது. தற்போதுதான், இந்த வைரஸ் ஆப்பிரிக்க நாடுகளிலும் பரவத் தொடங்கியுள்ளது. சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள ஆப்பிரிக்க நாடுகள், கொரோனா…