39 வயதில் இறந்த இராணுவ அதிகாரி – இறுதிச் சடங்கிற்காக 2 ஆயிரம் கிமீ குடும்பத்தினர் பயணம்
இராணுவ அதிகாரியின் இறுதிச்சடங்கில் பங்கேற்பதற்காக 2 ஆயிரம் கிலோ மீட்டர் பயணித்து அவரது குடும்பம் பெங்களூர் வரும் நிகழ்வு பலரையும் வேதனையடைய வைத்துள்ளது. நாடு முழுவதும் ஊரடங்குப் போட்டதிலிருந்து எத்தனையோ துயரமான சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. போக்குவரத்து முற்றிலுமாக முடக்கப்பட்டுள்ளதால் சாதாரண மக்கள் அல்ல ராணுவ அதிகாரியின் குடும்பம் ஒன்று கூட பாதிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைப் பொறுத்தவரை சட்டம் அனைவருக்கும் சமம் என்பதால் சில ராணுவ உயர் அதிகாரிகள்கூட ஒன்றும் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். சவுர்யா சக்ரா விருது பெற்றவர் கர்னல் நவ்ஜோத் சிங் பால். வெறும் 39 வயது நிரம்பிய இளம்…