கரவொலி எழுப்பி வீட்டுக்கு அனுப்பப்பட்ட கொரோனா நோயாளி – கேரள நெகிழ்ச்சி
கேரளாவில் கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டவரை மருத்துவமனையிலிருந்து உற்சாகமாய் கரவொலி எழுப்பி சக நோயாளிகள் அனுப்பி வைத்தனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. இந்தியாவிலேயே ஆரம்பத்தில் கொரோனா பாதிப்பு அதிகமாக அறியப்பட்ட மாநிலம் கேரளா. அதிலும் குறிப்பாகக் கேரளாவின் கசர்கோட் நகராட்சியில் கொரோனா பாதிப்பு வேகமாக அதிகரித்தது. காரணம் அங்கிருப்பவர்களில் பெரும்பாலானோர் துபாயில் பணிபுரிந்து அண்மையில் திரும்பியவர்கள். அந்த வகையில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்னர் துபாயிலிருந்து திரும்பிய நபர் தான் சுஹைல். …