ஓய்வூதிய பணத்தை வைத்து 6000 மாஸ்க் தயாரித்து வழங்கிய முதியவருக்கு மோடி பாராட்டு
தனது ஓய்வூதிய பணத்தை வைத்து 6000 மாஸ்க் தயாரித்து பொது மக்களுக்கு விநியோகித்த முதியவருக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பால் நாடுமுழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே 21 நாட்கள் அறிவித்த ஊரடங்கு உத்தரவு முடிவடைந்த நிலையில் மேலும் 19 நாட்கள் அதிகப்படுத்தி பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இந்த அறிவிப்பின் போது பேசிய மோடி, நாட்டு மக்களின் ஒத்துழைப்பு கொரோனாவை கட்டுப்படுத்துவதில் பெரும் பங்கு வகிப்பதாக தெரிவித்தார். மேலும் கொரோனாவுக்கு எதிரான போரில்…