ஏழைகளுக்கு இலவச மாஸ்க் தைத்துக் கொடுக்கும் 98 வயது மூதாட்டி..!
பஞ்சாப்பில் 98 வயது மூதாட்டி ஒருவர் ஏழைகளுக்கு இலவசமாக முகக் கவசங்களைத் தைத்துக்கொடுத்து வருகிறார். பஞ்சாப் மாநிலத்தின் மோகா பகுதியைச் சேர்ந்த 98 வயது மூதாட்டி குருதேவ் கவுர் தாலிவால். இவர் தினமும் காலையில் எழுந்தவுடன் பிரார்த்தனைகளை முடித்த பின்னர் 8 மணிக்குத் தையல் இயந்திரத்தில் அமர்கிறார். மாலை 4 மணி வரை முகக் கவசங்களைத் தைக்கும் இவர், அவற்றை ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்குகிறார். கொரோனாவை தடுக்க முதல் பாதுகாப்பு உபகரணமாகக் கருதப்படுவது முகக் கவசங்கள்…