புலம்பெயர் தொழிலாளர்களுக்கு 2 மாதம் இலவச உணவுப்பொருட்கள் : நிர்மலா சீதாராமன்
தன்னிறைவு திட்டத்தின் 2ஆம் கட்ட அறிவிப்புகளை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், கடந்த மார்ச் 1 முதல் ஏப்ரல் 30 வரை 63 லட்சம் விவசாயக் கடன்கள் 86 ஆயிரம் கோடி ரூபாய்க்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், நபார்டு வங்கி மூலம் கூட்டுறவு / கிராமப்புற வங்கிகளுக்கு வழங்கப்பட்ட கடன் 29,500 கோடி எனவும் தெரிவித்தார். அத்துடன், சிறு விவசாயிகள் பெற்றுள்ள கடனுக்காக வட்டி மே 31 வரை தள்ளுபடி எனக் கூறினார். கடந்த மார்ச் மாதத்தில் மட்டும் கிராமப்புற உள்கட்டமைப்பை…