திருப்பதியில் தானியங்கி பூந்தி தயாரிக்கும் இயந்திரத்துக்கு ரூ.50 கோடி நிதி கொடுத்த ஜியோ!
ஜியோ நிறுவனத்தின் 50 கோடி ரூபாய் நிதி உதவியுடன் திருப்பதி மலையில் தானியங்கி பூந்தி தயாரிப்பு இயந்திரம் நிறுவப்பட உள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் தெரிவித்துள்ளார். திருப்பதி மலையில் இன்று செய்தியாளர்களுடன் பேசிய தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் சுப்பா ரெட்டி இதுபற்றி கூறுகையில், “தொன்றுதொட்டு நடைமுறையில் இருக்கும் வழக்கமான முறையில் கோயிலுக்கு வெளியே தற்போது தயார் செய்யப்படும் பூந்தி கன்வேயர், பெல்ட் மூலம் கோவிலுக்கு உள்ளே அனுப்பப்படுகிறது. அங்கு பிரசாதம் தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள…