3 டாக்டர்கள், 26 செவிலியருக்கு கொரோனா – மூடப்பட்ட மும்பை மருத்துவமனை..!
மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் மூன்று மருத்துவர்கள் மற்றும் 26 செவிலியர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மருத்துவமனை மூடப்பட்டது. மும்பையிலுள்ள வோக்ஹார்ட் மருத்துவமனை வளாகம் இன்று முதல் ஒரு கட்டுப்பாட்டுப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மருத்துவமனையில் பணிபுரியும் சுகாதார ஊழியர்களுக்கு நடத்தப்பட்ட கொரோனா மருத்துவ பரிசோதனையில், அவர்களுக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டதால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. என்.டி.டி.வி அளித்துள்ள செய்தியின்படி இந்த மருத்துவமனையில் பணிசெய்த 26 செவிலியர்கள் மற்றும் மூன்று மருத்துவர்கள் என…