“கல்யாண தேதியை மறப்பியா?” – தன் குடும்பத்தினரை அழைத்து கணவரை சரமாரியாக தாக்கிய மனைவி!
மும்பையில் திருமண நாளை மறந்த கணவனை, தன்னுடைய குடும்பத்தாருடன் சேர்ந்து மனைவி சரமாரியாக அடித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இளைஞர் போலீசில் புகாரளித்துள்ளார். மும்பையின் புறநகர் பகுதியான காத்கோபரில் இந்த சம்பவம் நடந்துள்ளது. விஷால் நாங்க்ரே(32) என்ற நபருக்கும், கல்பனா (27) என்ற பெண்ணுக்கும் கடந்த 2018ஆம் ஆண்டு திருமணம் நடந்துள்ளது. விஷால் ஒரு கொரியர் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். கல்பனா ஒரு உணவு நிறுவனத்தில் வேலையில் உள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 18ஆம் தேதி…