பஞ்சாப்: விமானப்படை போர் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து; பைலட் உயிரிழப்பு
பஞ்சாபில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று அதிகாலையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார். இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் -21 ரக போர் விமானம், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் பஞ்சாப் மாநிலம் மோகா அருகே தனது வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், போர் விமானத்தின் விமானி அபினவ் சவுத்ரி உயிரிழந்தார். விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை இரங்கல்…