பஞ்சாபில் இந்திய விமானப்படைக்கு சொந்தமான போர் விமானம் இன்று அதிகாலையில் விழுந்து நொறுங்கியதில் விமானி உயிரிழந்தார்.

இந்திய விமானப் படைக்கு சொந்தமான மிக் -21 ரக போர் விமானம், இன்று (வெள்ளிக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் பஞ்சாப் மாநிலம் மோகா அருகே தனது வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது கட்டுப்பாட்டை இழந்த போர் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. 

image

இந்த விபத்தில், போர் விமானத்தின் விமானி அபினவ் சவுத்ரி உயிரிழந்தார். விமானியின் உயிரிழப்புக்கு இந்திய விமானப்படை இரங்கல் தெரிவித்துள்ளது. இந்த விபத்து தொடர்பாக உரிய விசாசரணைக்கும் விமானப்படை உத்தரவிட்டுள்ளது. இந்த வருடத்தில் மட்டும் மிக் -21 போர் விமானங்கள் சந்தித்த மூன்றாவது விபத்து இதுவாகும்.

Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Sign In

Register

Reset Password

Please enter your username or email address, you will receive a link to create a new password via email.