தடுப்பூசி- ‘இந்த வேகத்தில் போனால் இந்தியா ‘ஹெர்டு இம்யூனிட்டி’யை எட்ட 3.5 ஆண்டுகள் ஆகலாம்’
கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கான பணிகள் நாடு முழுவதும் நடந்து வரும் சூழலில், இந்தியாவில் தடுப்பூசி மூலம் கிடைக்கும் ஹெர்டு இம்யூனிட்டி எனப்படும் கொரோனாவுக்கு எதிரான குழு நோய் எதிர்ப்பு சக்தி அனைவருக்கும் கிடைக்க, குறைந்தபட்சம் 3.5 வருடங்களாவது ஆகுமென வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். இந்தியாவில் கொரோனா தடுப்பூசி விநியோகத்தில், தங்களிடம் தடுப்பூசி போதியளவு இல்லையென பல மாநில அரசுகள் கைவிரித்துவிட்டன. மொபைல் செயலியான ‘கோவின்’ ஆப் வழியாக தடுப்பூசிக்கு முன்பதிவு செய்யலாம் என்றால், தொழில்நுட்ப கோளாறுகளால் செயலியில் பல…