’மோடிக்கு 17 கேள்விகளுடன் பேனர்கள்’.. 2வது முறையாக பிரதமரின் நிகழ்ச்சியை தவிர்த்த கேசிஆர்!
ஐதராபாத்தில் பிரதமரின் நிகழ்ச்சியை தெலங்கானா முதலமைச்சர் சந்திர சேகர ராவ் தவிர்த்த நிலையில், பிரதமருக்கு 17 கேள்விகளை எழுப்பி பேனர்கள் வைக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று சென்னை வருவதற்கு முன்னதாக தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் நடைபெற்ற இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ் கல்லுரியின் 20-ம் ஆண்டு விழாவில் பிரதமர் மோடி கலந்துகொண்டார். பின்னர் பேகம்பட் விமான நிலையத்தில் பா.ஜ. கட்சியினரிடம் பேசிய அவர், அம்மாநில முதல்வரும், தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சித் தலைவருமான சந்திர சேகர ராவை கடுமையாக விமர்சித்தார்….