கர்நாடகா: அசுத்தமான தண்ணீரைக் குடித்து 3 பேர் அடுத்தடுத்து மரணம்! பலருக்கு தீவிர சிகிச்சை
கர்நாடகாவில் அசுத்தமான தண்ணீரைக் குடித்து 3 பேர் அடுத்தடுத்து மரணமடைந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது. கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டத்தில் அசுத்தமான தண்ணீரைக் குடித்ததால் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு 3 பேர் அடுத்தடுத்து மரணமடைந்தனர். குழந்தைகள் உட்பட மேலும் பலர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கழிவுநீர் கொண்டு செல்லும் குழாயுடன் குடிநீர் வழங்கும் குழாய் இணைந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை விசாரணைக்கு உத்தரவிட்டார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு…