புயலைக் கிளப்பிய இந்தி மொழி விவகாரம்- கர்நாடக முன்னாள் முதல்வர்கள் கருத்து
இந்தி தேசிய மொழி அல்ல என கர்நாடக முன்னாள் முதலமைச்சர்கள் சித்தராமையாவும், குமாரசாமியும் கூறியுள்ளனர். இந்தி தேசிய மொழியா என்பது குறித்து பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் மற்றும் கன்னட நடிகர் சுதீப் இடையே ட்விட்டரில் நடைபெற்ற வாக்குவாதம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் முதலமைச்சருமான சித்தராமையா ட்விட்டரில் பதிவு ஒன்றை இட்டுள்ளார். அதில் இந்தி ஒருபோதும் தேசிய மொழி அல்ல எனக் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் பன்மொழித் தன்மையை ஒவ்வொரு குடிமகனும்…