‘வேண்டாமே நியூட்ரினோ’ பிரதமருக்கு கடிதம் எழுதிய முதல்வர் ஸ்டாலின்
தமிழகத்தின் தேனி மாவட்டத்தில் நியூட்ரினோ ஆய்வகம் அமைக்கும் திட்டத்தை கைவிடச்செய்ய வேண்டும் என மீண்டும் ஒருமுறை கேட்டுக் கொள்வதாக பிரதமர் மோடிக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில் தேனி மாவட்டம் பொட்டிபுரத்தில் அமையவிருக்கும் நியூட்ரினோ ஆய்வகத்தால் அப்பகுதியின் சுற்றுச்சூழல் மீளாத பாதிப்பிற்கு உள்ளாகும் என முதல்வர் தெரிவித்துள்ளார். உலகின் மிகச்சிறந்த பல்லுயிரின பெருக்க பகுதிகளில் ஒன்றாக கருதப்படும் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் இத்திட்டம் செயல்படுத்தப்படுவதால்…