வசந்தகாலத்தை வரவேற்கும் மேற்குத்தொடர்ச்சி மலை!.. இனப்பெருக்கத்தை துவக்கிய பறவைகள்
மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பறவைகளின் இனப்பெருக்கத்திற்கான வசந்த காலம் துவங்கியது. கொடைக்கானலில் உள்ள பல்வேறு வகையிலான வனக்குருவிகள் கூடுகள் கட்டி, முட்டைகள் இட்டு, குஞ்சு பொறிக்கும் காலம் துவங்கியுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைகளின் இளவரசியாக திகழும் கொடைக்கானல் மலைப்பகுதி, கிழக்கு நோக்கி தனது மலை வளத்தை கொண்டுள்ளதால், கோடை காலம் என அழைக்கப்படும் வசந்த காலம், சற்று முன்னரே இப்பகுதியில் துவங்கும். அதிக குளிரும் இல்லாமல், சுட்டெரிக்கும் வெயிலும் இல்லாமல் இதமான சூழல் நிலவும் வசந்த காலத்தின் அறிகுறிகளாக, வசந்த கால பூக்களான நீலகிரி மலர்கள், கொன்றை மலர்கள், வேங்கை…