நாட்டின் 30% நிலத்தை வன உயிர்களுக்கு ஒதுக்குகிறோம் – ஆஸ்திரேலிய அரசின் புது முயற்சி!
உலகில் வேறு எங்கும் காணப்படாத உயிரினங்களுக்கு புகழ்பெற்ற ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள தாவரங்கள் மற்றும் உயிரினங்களை பாதுகாக்கும் புது முயற்சியில் அந்நாட்டு அரசு இறங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக 30 சதவிகித நிலத்தை வனவிலங்குகள் பாதுகாப்புக்கு ஒதுக்குவதாக அந்நாட்டின் சுற்றுச்சூழல் அமைச்சர் டான்யா பிலிபெர்செக் (TANYA PLIBERSEK) தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் ஆண்டுதோறும் ஏற்படும் காட்டுத்தீயில் பல ஏக்கர் கணக்கிலான காடுகள் மற்றும் பல்லாயிரக்கணக்கான அரிய வகை உயிரினங்கள் அழியும் நிலைக்கு தள்ளப்பட்டு வந்தன. மற்ற கண்டங்களை விட…