தென்காசி: சாலை ஓரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம்
தென்காசி சாலை ஓரங்களில் கொட்டப்படும் மருத்துவக் கழிவுகளால் சுகாதாரக்கேடு ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. தென்காசி மாவட்டத்தில் தென்காசி – ஆய்க்குடி செல்லும் சாலை ஓரங்களில் பல இடங்களில் மருத்துவ கழிவுகள் மூட்டை மூட்டையாக கொட்டப்பட்டுள்ளன. இதில், சில மூட்டைகள் எரிக்கப்பட்டும் சில மூட்டைகள் எரிக்கப்படாமலும் சுகாதாரக்கேடு உருவாகும் வகையில் உள்ளன. ஆய்க்குடி செல்லும் சாலையில் அடிக்கடி பாதசாரிகள் நடந்து செல்லும் சாலை ஓரத்தில் பயன்படுத்தப்பட்ட சிரஞ்சுகள், ஊசிகள், ஐவி செட்கள், காலாவதியான மற்றும் பயன்படுத்தப்பட்ட மருத்துவ கழிவுகள்…