கொரோனா கால மகத்துவர்: ஆட்டோவில் ஆக்சிஜன் வசதியுடன் உதவும் சென்னை தன்னார்வலர் சீதாதேவி!
கொரோனாவால் தன் தாய்க்கு ஏற்பட்ட நிலை போல பிறருக்கு வரக்கூடாது என்பதற்காக ஆட்டோவில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து கொரோனா நோயாளிகளுக்கு உதவி வருகிறார் சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சீதாதேவி. கொரோனா இரண்டாம் அலையால் ஏற்பட்டிருக்கும் தாக்கம், பலரது மன உறுதிப்பாட்டையும் அசைத்து பார்த்து வருகிறது. ஒருபுறம் பயத்தை ஏற்படுத்தினாலும், தனக்கு ஏற்பட்ட இந்நோய் எதிரிக்கு கூட ஏற்படக் கூடாது என்பதே குணமடைந்தவர்களின் உளபூர்வமான விருப்பமாக இருக்கிறது. அப்படியொரு மனமுதிர்ச்சி சென்னை கொடுங்கையூரை சேர்ந்த சீதாதேவிக்கும் ஏற்பட்டிருக்கிறது. கடந்த ஒன்றாம்…