தன்னைத்தானே செதுக்கிய சிற்பி… நடிப்பின் `மான்ஸ்டர்’ எஸ்.ஜே.சூர்யாவின் சினிமா பாதை!
`அவ்ளோ ஓவர் ஆக்டிங் பண்ணாத… அவன் உன்னைவிட பயங்கரமா நடிப்பான்’- மாநாடு படத்தில் இப்படி ஒரு வசனம் வரும். அதற்கு ஏற்றவர் அவர். ஒரு நிமிடம் அசந்தால், எதிரில் நிற்கும் முக்கிய கதாபாத்திரத்தை ஏற்றுள்ள பெருநடிகனையும் தூக்கி சாப்பிட்டுவிடும் நடிப்பு அசுரன். அவர்தான் பன்முகக்கலைஞர் எஸ்.ஜே.சூர்யா! இன்று எஸ்.ஜே.சூர்யாவின் பிறந்தநாள். எல்லா நாளும் கொண்டாட வேண்டிய அந்தக் கலைஞனை, இன்று கொண்டாடமல் எப்படி? நடிகராக வேண்டுமானால், எஸ்.ஜே.சூர்யா 2010-க்குப் பின் பல படங்களில் முத்திரை பதித்திருக்கலாம். ஆனால்…