நமக்குள்ளே…
சமீபத்திய வழக்கு ஒன்றில், `தாலியை மனைவி கழற்றிவைப்பது கணவரை மனரீதியாகக் கொடுமைக்கு உள்ளாக்கும் செயல்’ என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றம் விவாகரத்து வழங்கி தீர்ப்பு கூறியிருப்பது, அதிர்ச்சியளிக்கிறது. இந்தத் தீர்ப்பை வழங்கியிருக்கும் இரு நீதிபதிகளில் ஒருவர் பெண். அதுவும் திருமணமாகாத பெண். ஈரோடு மருத்துவக் கல்லூரியின் பேராசிரியர் சிவக்குமார், குடும்பநல நீதிமன்றம் தனக்கு விவாகரத்து கொடுக்க மறுத்ததை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்து திருமணச் சட்டம் பிரிவு 7-ன்படி தாலி அவசியமில்லை…