மீண்டும் கேட்கலாமா சிட்டுக்குருவிகளின் கீச்சுகளை?- இன்று உலக சிட்டுக் குருவிகள் தினம்!
இப்போதுள்ள குழந்தைகளுக்கு சிட்டுக் குருவி என்றொரு பறவை இருக்கிறது என்றால் தெரியுமோ? தெரியாதோ? முக்கியமாக சென்னை போன்ற பெருநகர குழந்தைகளுக்கு சிட்டுக் குருவியை பார்ப்பதே அரிதிலும் அரிதான நிகழ்வாகத்தான் இருக்க முடியும். நமக்கிருக்கும் ஒரே ஆறுதல் கிராமங்களில் சிட்டுக் குருவிகள் இன்னமும் இருப்பதே ஆகும். ஆனால் சென்னையில் கூட 25 ஆண்டுகளுக்கு முன்பு வரை சிட்டுக் குருவிகளின் கோட்டையாகவே இருந்தது என்பது இப்போது வெறும் வரலாற்று பதிவாகிவிட்டது. அப்போதெல்லாம் சிட்டுக் குருவியின் “கீச் கீச்” குரல்களில்தான் குழந்தைகள்…