முடியும் என்றால் விடியும் !
கண்ணுக்கெட்டிய தூரம்வரை அலைகடலும் அனல் மணலும் விரிந்து பரந்து கிடக்கும் அமானுஷ்ய தனுஷ்கோடிக்கு அருகிலுள்ள குட்டித்தீவு அரிச்சல்முனை. அந்த தீவில்தான் பாக்யராஜை சந்தித்தோம். ஆளரவமற்ற தீவில்…நான்கு சவுக்குக் கம்புகளை நட்டு, மேலே ஒரு கூரையைப் போட்டு குளிர்பானங்கள், முத்து,பவளம், பாசிமணிகள், சங்குகள், ஜிமிக்கி கம்மல், கலர் கயிறுகள் என சின்னதாக ஒரு கடை பரப்பியிருக்கிறார் பாக்யராஜ். “என்ன நம்பிக்கையில தனித்தீவுக்குள்ள தன்னந்தனியா கடை வெச்சீங்க?”- கேட்டதுமே வெள்ளையாகச் சிரித்தபடி பேசினார் பாக்யராஜ்… ”டவுன்ல (ராமேஸ்வரத்தில்) கடை வைக்கணும்னா…