“கோட்சேவே 14 ஆண்டுகளில் வெளியே வந்துவிட்டார்”-பேரறிவாளன் வழக்கில் காரசார வாதம்-முழுவிவரம்
“பேரறிவாளனுக்கு பிணை வழங்கப்பட்டுள்ளதால், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள மற்றவர்களுக்கும் பிணை கிடைக்க வாய்ப்பு இருக்கிறது” என, பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு தெரிவித்துள்ளார். 1991 ஜூன் மாதம், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறைக்கு சென்ற பேரறிவாளனுக்கு, 30-க்கும் மேற்பட்ட வருட சிறைதண்டனைக்குப்பிறகு முதன்முறையாக ஜாமீன் வழங்கி இன்று உத்தரவிட்டிருந்தது உச்சநீதிமன்றம். உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்து கருத்துகள் பதிவாகிவரும் நிலையில், இதுகுறித்து பேரறிவாளன் தரப்பு வழக்கறிஞர் பிரபு புதிய தலைமுறைக்கு…