`ஸ்ரீவில்லிபுத்தூர் மலையில் பரவும் காட்டுத் தீ’ – மலையடிவார விவசாயிகள் அச்சம்!
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நெடுங்குளம்-தானிப்பாறை செல்லும் சாலையில் சின்னகுட்டம் மலைப்பகுதி உள்ளது. இந்த மலையடிவாரப் பகுதியில் சுமார் 500-க்கும் மேற்பட்ட ஏக்கரில் தென்னை, மா விவசாயம் நடைபெற்று வருகிறது. பரவும் தீ இந்நிலையில், சின்னகுட்டம் மலைப்பகுதியில் இரவில் திடீரென பயங்கர காட்டுத் தீ ஏற்பட்டுள்ளது. மாலையில் சிறிய அளவில் ஏற்பட்ட தீ விபத்தானது இரவில் மலைப்பகுதியைச் சுற்றிலும் பரவியதால் காட்டுத்தீயாக மாறியது. இதுகுறித்த தகவல் வனத்துறைக்கும், தீயணைப்பு படைக்கும் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு வந்த…