வேலூர்: `23 இடங்கள் மழையால் பாதிக்கப்படக்கூடியவை’ – நிவாரண முகாம்கள் தயார்; உதவி எண்களும் அறிவிப்பு
வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும் நிலையில், வேலூர் மாவட்டத்தில் அதன் பாதிப்புகளை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுவருகின்றன. இந்த மாவட்டத்தில் வெள்ளப் பாதிப்பு பகுதிகளாக ‘23 இடங்கள்’ கண்டறியப்பட்டிருக்கின்றன. மழைப் பாதிப்பு ஏற்படும்போது, அந்த 23 இடங்களிலும் வசிக்கும் மக்களை மீட்டு தங்க வைப்பதற்காக மாவட்ட நிர்வாகம் தரப்பில் 26 நிவாரண முகாம்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான மீட்புப் பணிகளுக்காக 24 பெண்கள் உட்பட 239 முதல்நிலைப் பொறுப்பாளர்களும் தயாராக இருப்பதாக மாவட்ட ஆட்சியர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்திருக்கிறார். மாவட்ட…