கேரளாவில் தொடர் கனமழை: நிலச்சரிவில் சிக்கி 21 பேர் பலி; மாயமானவர்களை தேடும் பணி தீவிரம்!
தென்கிழக்கு அரபிக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால், கேரள மாநிலத்தில் தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் மாநிலத்தில் உள்ள 46 முக்கிய அணைகள் 80 சதவிகிதம் நிரம்பியுள்ளன. முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் 133.05 அடியாக உள்ளது. இடுக்கி அணையும் நிரம்பி வருகிறது. இந்த அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும் தொடர்மழை பெய்துவருவால் ஒரே நாளில் 3 அடிவரை அணையின் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டில் அதிகப்பட்சமாக பீர்மேடு பகுதியில் 293 மில்லி மீட்டர், முல்லைப்பெரியாறு…