`காப்பாத்திடலாம்னு நினைச்சோம்; இப்படி ஆகும்ணு நினைக்கல!’ – SMA-வால் உயிரிழந்த 9 மாத சிறுமி
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சேர்ந்தவர்கள் ஜெகன்நாதன் – பிரியதர்ஷினி தம்பதி. இந்தத் தம்பதியின் 9 மாதப் பெண் குழந்தை நித்தன்யாஸ்ரீ, பிறந்து 3 மாதங்கள் வரை எந்தப் பிரச்னைகளும் இல்லாமல் ஆக்டிவ்வாக இருந்து வந்திருக்கிறார். அதன் பிறகு அடிக்கடி சோர்ந்து போவது, சரியாக உணவு எடுத்துக் கொள்ளாதது எனச் செயல்பாடுகளில் சில மாற்றங்கள் தென்பட்டிருக்கின்றன. அதனையடுத்து குழந்தை நித்தன்யாஸ்ரீயை மருத்துவர்களிடம் அழைத்துச் சென்று பரிசோதனை செய்ய, குழந்தை `ஸ்பைனல் மஸ்குலர் அட்ரோஃபி’ (Spinal muscular atrophy –…