`கொன்றுவிட்டேன்; காரில் நண்பனின் சடலம் இருக்கிறது’- போலீஸை அதிரவைத்த இளைஞர்; காதல் மோதலில் விபரீதம்!
குஜராத் மாநிலம், அகமதாபாத்தில் நடந்த கிரிக்கெட் விளையாட்டின் ஆராவாரம் ஓய்ந்திருந்தபோது, அதிகாலை 4 மணியளவில் வேதாந்த் ராஜா என்ற 22 வயது இளைஞர் காவல் நிலையத்துக்குள் நுழைந்தார். அதிகாலை பாதி தூக்கத்திலிருந்த காவலர்களிடம், “வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் எனது எஸ்.யூ.வி காரில் நண்பனின் சடலம் இருக்கிறது” என்றவுடன், காவல்துறை அதிகாரிகள் அதிர்ந்துபோய், காரை சோதனையிட்டனர். கொலை அதில் ஓர் இளைஞரின் சடலம் இருந்தது. உடனே வேதாந்த் ராஜாவைக் கைதுசெய்த காவல்துறை, அவரிடம் விசாரணை மேற்கொண்டது. இது குறித்துப் பேசிய…