Pragnananda: “தாயின் துணை தனி பலம், வெற்றி நமதே!”- பிரக்ஞானந்தாவின் தாயைப் பாராட்டிய கேரி காஸ்பரோவ்
மகன் பிரக்ஞானந்தாவின் வெற்றியைத் தூரம் நின்று ரசிக்கிற தாய் நாகலட்சுமியின் புன்னகை, காண்போரை நெகிழச் செய்து வருகிறது. அஜர்பைஜானில் நடைபெற்று வரும் செஸ் உலகக் கோப்பை தொடரில், தமிழ்நாட்டைச் சேர்ந்த கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா உலகத் தரவரிசையில் 3-ம் இடத்தில் உள்ள அமெரிக்க கிராண்ட் மாஸ்டர் ஃபேபியானோ கருவானாவை அரையிறுதியில் வென்று இறுதிச்சுற்றுக்குத் தகுதியாகியுள்ளார். இறுதிச்சுற்றில் இவர் கிராண்ட் மாஸ்டர் மேக்னஸ் கார்ல்சனை எதிர்த்து தற்போது ஆடிவருகிறார். பிரக்ஞானந்தா மற்றும் அவரது தாய் நாகலட்சுமி, இந்நிலையில் இறுதிச்சுற்றுக்குத்…