பிட்காயினை அதிகாரப்பூர்வ பரிவர்த்தனைக்கு ஏற்றுக்கொண்ட `எல் சல்வதார்’ நாட்டின் நிலை என்ன?
தென் அமெரிக்காவில், கெளதிமாலா, ஹோண்டுராஸ் ஆகிய நாடுகளுக்கு அருகில் இருக்கும் ஒரு சிறிய நாடுதான் எல் சல்வதார். காபி, பருத்தி, சோளம், கரும்புக்கு பேர் போன இந்த நாடுதான், உலக அரங்கில் முதல்முறையாக, பிட்காயினை ஒரு அதிகாரபூர்வ பணப்பரிவர்த்தனை சாதனமாகப் பயன்படுத்திக் கொள்ள சட்டம் இயற்றியது. கடந்த ஜூன் 2021-ல், பிட்காயினை அதிகாரபூர்வமான பணப்பரிவர்த்தனை சாதனமாக மாற்ற சட்டம் இயற்றுவதாகக் கூறியபோது, பல பொருளாதார வல்லுநர்களும் நம்பவில்லை. 2021 செப்டம்பரில் அதை செயல்படுத்திய போது, பன்னாட்டு நிதியம்…