திறம்பட பணியாற்றாவிட்டால் வெளியேறுங்கள்! BSNL ஊழியர்களுக்கு மத்திய அமைச்சர் எச்சரிக்கை!
திறம்பட பணியாற்றுங்கள்! அவ்வாறு பணியாற்ற முடியாவிட்டால் வெளியேறுங்கள் என்று பிஎஸ்என்எல் ஊழியர்களுக்கு தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எச்சரிக்கை விடுத்துள்ளார். தனியார் நிறுவனங்களுடன் போட்டியிட முடியாமல் திணறி வரும் பிஎஸ்என்எல் பொதுத்துறை நிறுவனத்தின் உயரதிகாரிகள் கூட்டத்தில் இதை அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட பணியை திறம்பட செய்து நிறுவனத்தை சிறப்பாக உயர்த்த வேண்டும், தவறினால் வெளியேறத் தயாராக இருக்க வேண்டும் என அஸ்வினி வைஷ்ணவ் பேசியுள்ளார். “சர்க்காரி” மனப்பான்மையை கைவிட்டு ஊழியர்கள் பணியாற்ற வேண்டும் என்றும்…