இ.எம்.ஐ (EMI) பற்றி ஆர்பிஐ சொன்னது என்ன ? வல்லுநர்களின் விளக்கம்
வங்கியில் கடன் பெற்றவர்களிடம் மாதத் தவணை கட்டணத்தை 3 மாதங்களுக்கு வசூலிக்க வேண்டாம் என அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. ரிசர்வ் வங்கி சார்பில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவ்வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். அதன்படி, கொரோனா வைரஸ் நெருக்கடியை மக்கள் மற்றும் தொழில் முதலீட்டாளர்கள் எதிர்கொள்ளும் வகையில் பல அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இதில் முக்கிய அறிவிப்பாக 3 மாதங்களுக்கு மாதாந்திர தவணையை கடனாளிகள் செலுத்த வேண்டாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால்,…