‘கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தக் கூடாது’ – ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
கடன் வாங்கியவர்களை அவமானப்படுத்தக் கூடாது என வங்கி முகவர்களுக்கு ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு அளித்த கடனை வசூலிக்க வங்கிகள், நிதி நிறுவனங்கள் வசூல் முகவர்களை நியமனம் செய்கின்றன. இவர்கள், கடன் பெற்றவர்களை மனரீதியாக துன்புறுத்துவதாக ரிசர்வ் வங்கிக்கு ஏராளமான புகார்கள் வந்தன. இதையடுத்து, கடன் வசூல் முகவர்களுக்கு தற்போது புதிய விதிமுறைகளை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, கடன் பெற்ற வாடிக்கையாளரை பொதுவெளியில் அவமானம் அல்லது இழிவுபடுத்தும் உரிமை கடன் வசூல் முகவர்களுக்கு இல்லை என்றும்,…