கோட்டாக் மஹிந்திராவின் அடுத்த சி.இ.ஓ-க்கான போட்டியில் வாரிசு இல்லை!
ஹெச்சிஎல் ஷிவ் நாடார் தனது பதவியிலிருந்து ராஜினமா செய்து, தனது குழுமம் பொறுப்புகளுக்கு வாரிசாக தனது மகள் ரோஷினியிடம் தலைவர் பொறுப்பை ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து, பல முன்னணி வர்த்தக நிறுவனங்கள் தங்களது வாரிசிடம் பொறுப்புகளை ஒப்படைக்கும் நிகழ்வுகள் நடைபெற்று வந்தன. இதை போல், இந்தியாவில் முக்கிய வங்கியான கோட்டாக் மஹிந்திரா வங்கியின் நிறுவனர் உதய் கோடாக், தனது மகன் ஜெய் கோடக்விற்கு நிர்வாகத்தை கொடுக்க போகிறார் என்ற செய்தி வெளிவந்துக்கொண்டே இருந்தன. இந்த செய்திகள் அனைத்தும்…